பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்179


O

 

செடிகளும் கொடிகளும்

சேர்ந்திசை பாடின!

 

O

 

வண்டுகள் பூக்களில்

வசமிழந்து கிடந்தன !

 

O

 

தேய மறந்தது நிலவு !

வீழ மறந்தது நிழலே !

 

O

 

‘இறைவனின் தூதுவர்’!

‘இறைவனின் தூதுவர்’!

 

O

 

உலகின் பாடலில்

உயிர்கள் மகிழ்ந்தன !

 

O

 

இயற்கை முழுவதும்

இன்பம் படர்ந்தது!

 

O

 

‘இறைவனின் தூதுவர்’!

‘இறைவனின் தூதுவர்’!