பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்181


குருதி - எதிர் திசையில்

குதிக்கத் தொடங்கியது !

வியர்வை முத்துக்கள்

வெடித்துச் சிதறின !

 

O

 

உள்வாங்கும் காற்றில்

நெருப்பு அறுவடை

உச்சமாய் நிகழ்ந்தது !

 

O

 

‘போர்த்துக என்னைப் போர்த்துக’

என்றார்.

திறந்து பேசிட வந்த பெருமான்

போர்வைக்குள்ளே

பொதியப்பட்டார்!

என்ன நடந்தது?

ஏந்திழை கேட்டார்.

அன்னவர் வந்தார்

வான் மறை தந்தார்

வண்ணச் செய்தியை

வரிமாறாமல்

வகுத்தே உரைத்தார்.

 

O

 

உடைந்து கிடந்த

நாயகம் மனதை

ஒட்டிச் சேர்த்தார்

கதீஜா நாயகி!