O கவலையை விடுங்கள் ; களிப்போடிருங்கள் கருத்தன் உங்களைக் கைவிடமாட்டான் ! O வறியவரின் தாகத்தில் தெப்பம் நீங்கள்... வாழ்விழந்த உறவினரின் வசந்தம் நீங்கள்... இருட்டுக்குள் வாழ்வோர்க்கு உதயம் நீங்கள்... இன்பத்தைப் பங்குவைக்கும் இதயம் நீங்கள்... எந்நாளும் நாயனுங்கள் பக்கம் நிற்பான்... எப்போதும் நபிகளுக்கே நிழலாய் ஆவான்... இப்போது இமைக்கதவை மூடிக்கொஞ்சம் இளைப்பாறல் அவசியமாம் என்றாளம்மா! O தூங்க வைப்பதற்காகவே பாடவந்த தாய்மாரின் மத்தியிலே... உலகம் விழிக்கவென்றே பாடவந்த மாநிலத்தாயான மாநபியிடமிருந்து |