தொடர்ந்து வருமா ? இல்லை... ஒதுங்கி நின்று உறவை அறுத்திடுமா? O எவரிடம் நான் போவேன்? எங்கே நான் புகன்றிடுவேன்? கலங்கி நின்றார் அண்ணல்! O பங்கயக் கையில் வைத்து படும் சுடர் காத்தல் போல மங்கையர் தலைவியான மாதவப் பிராட்டியன்று மறுமொழி ஒன்று சொன்னார். மாநபி கேட்டிருந்தார்... O அடுத்தவர்கள் கேட்கட்டும் கேட்காமல் போகட்டும் உலகமே எதிர்த்தாலும் உங்கள் பக்கம் நானிருப்பேன். நம்பி நான் நிற்கின்றேன் நாயகமே நீர் தூதர்... இறைவன் ஒருவன் தான். |