அண்ணலின் போதனை அடுத்தடுத்து சோதனை.. . துளிகளின் தொகுதி நதியாகிறது ! O உலகத்தை நமக்குக்காட்ட உருவானோர் நாட்டில் உண்டு உலகிற்கு நம்மைக்காட்ட உழைத்தவர் ஏட்டில் உண்டு நம்மையே நமக்குக் காட்ட நாயகன் தெரிந்துகொண்ட நயன்மிக்க ஆடி அன்றோ நாயகம்என்ற நல்லார்! O இஸ்லாம் என்ற கார்த்திகை நாள் கண்ணளந்த சுடர்விளக்கை... கலப்பு நெய்யூற்றி கவிழ்க்கப்பார்த்தார்கள்! O அகலின் கொள்ளிடம் அகலமாக இருந்ததால்... இஸ்லாமிய தீபம் நீர்த்துவிட்ட நெய்யிலும் நெருப்பு நீச்சல் நடத்தியது ! |