பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்187


O

 

இஸ்லாம்

சுடராகப் பிறந்தது...

அகலாக வளர்ந்தது...

தீபமாக நிமிர்ந்தது...

தீப்பந்தமாகத் திமிறியது...

வேள்வி நெருப்பாக

வெகுண்டு எரிந்தது!

இஸ்லாம்

அலட்சியப் படுத்தியவர்களின்

தாடைப் பற்களைத்

தடவிப் பார்த்தது!

 

O

 

எதிர்த்தவர்களின்

குதிங்கால் நரம்புகளுக்குக்

குறிவைத்தது!

 

O

 

வன்முறைக்கு - அது

வரவேற்புப் பத்திரம்

வாசிக்கவில்லை !

அதே நேரத்தில்...

புதைக்க நினைத்தவர்களை

விதைக்க முனைந்தது!

 

O

 

நபிகள் நாதர்

இஸ்லாம் என்ற