பக்கம் எண் :

188 வலம்புரி ஜான்


இனிப்பு வைரத்தை...

மூன்றாண்டு வரைக்கும்

மூடிய கைக்குள்

முறையாய் வைத்திருந்தார்!

 

O

 

விரல் இடுக்குகளின்

வழியாகத்தான்...

வெளிச்சம் விரைந்தது !

 

O

 

அண்ணலாரின்

கை நெல்லானது...

வியர்வையில் ஆடி

விரல்களில் ஓடி

உள்ளங்கையினில்

வயலாய் நிமிர்ந்தது !

 

O

 

பின்னொரு நாள்...

அச்சம் ஊட்டி

எச்சரிக்குமாறு

ஆண்டவன் -

அறிவித்தான் !

 

O

 

மூன்றாண்டுகள்

சல்லடை வழியாய்ச்

சரிந்த வெள்ளம்...

பொங்கிப் பெருக்கெடுத்து

பூவனமாய் ஆனது !