பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்21


எனது இந்த பிள்ளைக் கிறுக்கலை

முத்திரை குத்தி

உரியவர்களுக்குச் சேர்ப்பது

உனது பொறுப்புத்தானே !

O

நான்

இடிப்பதற்காகவே

சுவர்கள் எழுப்புகிறவன்

நீ

சுண்ணாம்பு அடித்தாலும்

அதில் ஒரு

சுவையான செய்தி இருக்குமே !

O

இறைவனே !

இது

கவிதையாக

இல்லாமல் போகட்டும்.

விதையாக

இருந்தால் போதாதா?

உனது உயிர்க்காற்றை

இந்த விதைக்குள்ளே

ஊது !

O

இந்த

உயிர்ப்பறவைக்கும்

சிறகுகள் சேரட்டும் !