அது வெளிச்ச அலகுகளால் காலத்தின் கறுப்பை கத்திரித்துப் போடட்டும் ! O குறிக்கோள் இல்லாமல் நீ காட்டுப் பூவைக் கூட சிரிக்க வைக்க மாட்டாய் ! மழை இங்கே விசிறிக் கொண்டே விழுகிறது ... காற்று இங்கே இருமிக்கொண்டே நடக்கிறது ... எல்லாவற்றிற்கும் காரணம் இருக்கிறது ! O நாயனே ! உப்புக் கல்லாக இருக்கிற என்னை ஒளி மிகுந்த வைரமாக மாற்று - என்று உன்னைக் கேட்கவில்லை ! O புழுவாக இருக்கிற என்னைப் பூச்சியாக மாற்றக் கூடாதா? |