O உள்ளவயல்களை உழுது எண்ணவிதைகளை நடுகிறவனே ! O நீ நீண்டவிடுப்பில் இருக்கிறாயோ என்கிற சந்தேகம் தைமாத மேகத்தைப் போல் என்னில் தலைகாட்டிப் போகிறது ! O அநியாயங்கள் பொடிபட ஆண்டவன் அவதரிப்பான் என்னும் பிறந்தகத்தின் பிலாக்கணத்தால் எனது காதுகள் புத்த பிட்சுகளோடு போட்டி போடுகின்றன ! O எங்கள் ஊரில் ... ஆயுதங்களை சாமிகளுக்கு தந்துவிட்டு ஆசாமிகள் நிராயுதபாணிகளாக நிற்கிறார்கள் ! |