O அய்யனாரைக் காவலுக்கு நிறுத்துகிறார்கள். அவர் களவு போனதற்காகப் பிள்ளைப் பூச்சிகளிடத்திலே பிராது கொடுக்கிறார்கள் ! O இறைவனே செயல்படச் சொல்லி - எங்களுக்கு கை கால்களைக் கொடுத்தாய் ... O நாங்களே - நாக்குகள் இரண்டைத் தவிர உறுப்புகள் அனைத்திற்கும் வருடாந்திர விடுமுறை விட்டுவிட்டோம் ! O தொழுகை உதடுகளின் ஊஞ்சலாட்டம் மாத்திரமா? இதயத்தின் பெருமூச்சு மாத்திரமா? அநியாயத்தைக் கரம் கொண்டு எதிர்ப்பதும் அல்லவா? O இறைவா! எனக்கு வலப்பக்கம் |