பக்கம் எண் :

240 வலம்புரி ஜான்


மின்னல் கூட

வளையாத...

அபிசீனிய நாட்டிற்கு

நடந்துபோன - அந்த

நாற்றுகள் -

இரவோடு இரவாக

இடப் பெயர்ச்சியாயின!

 

O

 

சிறுகூட்டம் தப்பித்த

செய்தியைக் கேட்டு

நாடாண்ட நரிக்கூட்டம்

கொடுமைகளைக்

கொலுவேற்றியது...

 

O

 

முட்டைத்தோடுகளைத்

தலைக் கவசங்களாகத்

தாங்கிக்கொண்டு -

முன்னேறி நடக்கிற

முதல் நாள் கோழிக்குஞ்சுகளைப்போல...

தாக்குதலுக்கு ஆளான

முஸ்லீம்கள் -

அபிசீனியாவிற்கு

அலையாய்ச் சென்றார்!