பக்கம் எண் :

244 வலம்புரி ஜான்


மண்ணுக்கேற்ற

மாபெரும் மார்க்கம்...

 

O

 

நபிகள் நாயகம்

ஆற்றுப் படுத்திய

அற்புத மார்க்கம்

எங்கள் மார்க்கம் -

என்றனர் அவர்கள்...

 

 

O

 

வெளிச்சத்தில்

வாழ விரும்பியதால்...

இருட்டின் ஆதிக்கம்

எங்களை -

எழும்பவிடாமல் அழுத்தியது!

 

O

 

சூறைக்காற்றின்

சுழற்சிக்குத் தப்பிய

தேமல்கள் நாங்கள்...

தென்றலின் தேசத்திற்கு -

அகதிகளாக வந்துள்ளோம்...

என்றனர்.

 

O

 

நபிகளுக்கு

வேதம் இறங்கியதாக

விளம்புகிறீர்களே !

ஓதிக்காட்ட இயலுமா?

ஊராள்வோன் கேட்டான்.