பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்245


‘மரியம்’ என்ற

பாவியப் பகுதியை

ஓதினர் அவர்கள்.

 

O

 

மன்னனும் அழுதான் ;

மற்றவர் அழுதனர்.

உங்களின் வேதமும்

எங்களின் வேதமும்

ஒரு சுடர் பெற்ற

இரு நாக்கன்றோ?

 

O

 

ஓதிய மறை ஒலி

அணுத்திரள் எல்லாம்

ஆட்சியைப் பிடித்தது!

அல்லா   சொல்லே

அருமை வேதம்

அய்யம் எனக்கு

அணுவும் இல்லை...

 

O

 

மாடப்புறாக்களை...

மந்தியின் கையில்

தரவே மாட்டேன் !

மன்னவன் உரைத்தான்...

 

O