பக்கம் எண் :

246 வலம்புரி ஜான்


கிழக்கு வெளுத்தது

எனினும்...

இருளும் ஒளியும்

பின்னிக்கிடந்தன...

சூதுமதியினர்

சூழ்ச்சி செய்தனர்...

 

O

 

ஏசு பெருமான்

எம்மாம் பெரியவர்!

குன்றின் அனையாரைக்

குன்றிமணி என்று

குறிப்பதே இவர் வேலை -

குமுறினர்.

 

O

 

அரசனின் மனக்குளத்தில்

ஆயிரம் அலைகள்...

நுரைப் பூக்களின்

நூதன சங்கீதம்!

 

O

 

எங்கள் நபியைப் பற்றி

என்னதான் எண்ணம்

என்றான் அரசன்.

ஈசா நபி என்ற

இயேசு பெருமான்

அல்லாவின் நல்லடியார் -

உத்தமராம் அவர் உதட்டில்

உருவான சொல்லெல்லாம்

அல்லா அமைத்தவைதான்

அணுவளவும் அய்யமில்லை

என்றனர்.

 

O