பக்கம் எண் :

250 வலம்புரி ஜான்


மார்க்கத்தில் சேர்ந்தீர்

மதியிழந்தீர்...

அந்த -

திமிங்கிலத்தின்

பல்வரிசைகள்

ஒன்றை ஒன்று

துலக்கிக் கொண்டன!

 

O

 

இங்கே -

இலவசமாகக் கிடைப்பது

புத்திமதி ஒன்றுதான்...

 

O

 

உம் தங்கை பாத்திமா -

அவள் தம் கணவர்

மார்க்கக்கரை ஏறி

மாலுமிகளாகி விட்டார்கள்...

என்றார்.

 

O

 

மனிதச் சூறாவளி

தங்கை இல்லத்திற்குத்

தாவிப்போனது...