பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்253


அண்ணலின் அற்புதம்!

 

O

தாழை மடல்தோறும்

செம்பஞ்சுக்குழம்பெடுத்து

பித்திகை அரும்புகளால்

பின்னிராப் பொழுதில்...

சந்திரன் -

வெளிச்சத்தின் விலாசத்தை

எழுதிக் கொண்டிருந்தான்!

 

O

 

அப்போது...

நபிகளிடத்தில்

குறைசிகள் கூட்டம்

குதித்து வந்தது!

 

O

 

பூரணச் சந்திரனைப்பாரும்

இதை -

இரண்டாக நீர் பிளந்தால்

இறைவனின் நபி

நீர்தான் என்று

நாநிலத்திற்கும் அறிவிப்போம்

என்றனர்!