பக்கம் எண் :

254 வலம்புரி ஜான்


வானை நோக்கினார்

வண்ணத் திருநபி-

‘துஆ’ செய்தார் -

சுட்டுவிரலால்

சாடை காட்டினார்!

 

O

 

இரவில் ஒளிர்ந்த

இன்பச் சந்திரன்

இரண்டாய்ப் பிளந்து

காட்சி தந்தான்.

அறுக்க ஆளில்லாமல்

ஆரஞ்சுப்பழம்

இரண்டாகி விட்டாலே

அதிசயம் தானே!

 

O

 

நிலவு இரண்டாய்

நீங்கிய பிறகும்...

குறைசிகள் ஏற்பரா?

 

O

 

வசியமைக்கு நீர்

வாரிசு!

சூன்யத்தால் இதுவெல்லாம்

சாத்தியம்தான் என்றனர்.

வெளிமாநிலத்தவர்கள்...

அதிசயம் இதனைக்

கண்டோம் என்று

அறைந்தால் தான்

என்றார்கள்!

   

O