இன்றைய இந்தியாவில் மஞ்சள் மகிமைகள் கறுப்பு மலர்களை நடத்துவதைப் போல நபிகளின் மக்கள் நடத்தப்பட்டனர். O உண்ணக்கிடைக்காமல் உறங்க முடியாமல் வயிற்றுப் பிள்ளைகளும் வாய்விட்டு அழுதன ! O வளர்ந்தவர்களின் வயிறுகளோ... அடைப்புகுறிகள் போல ஆயின ! O பக்கத்து ஊரார் எவரேனும் பண்டங்கள் விற்க வந்தால்... நபிகளின் மக்கள் பத்து மடங்கு பணம் தரவேண்டும் - பாவம் - பணத்தை எண்ணியே தேய்ந்த விரல்களில்... இன்று - எலும்புகள் தங்களை எண்ணிக்கொண்டன ! |