நீதி கழுவேற்றப்பட்ட மூன்றாமாண்டுக்கு நினைவு நாள் வந்தது... O அதுவரை - * பனூஹாஷிம்கள் பள்ளத்தாக்கில் பதுங்கிக் கொண்டனர். பள்ளத்தாக்குகள்... மலை முதலாளிகளை உப்ப வைக்கும் மண் தொழிலாளிகள்... O பார்ப்பவர் பார்த்தால் பள்ளத்தாக்கும் ஒருவகை உயரம் தான் ! O இங்கே - ஆடுகளுக்காவது இலை, தழை கிடைத்தது. ஆபிரகாமின் புத்திரர்களுக்கு... சருகுகள் கூட சரிவரக் கிடைக்கவில்லை ! * பனூஹாஷிம்கள் குறைசி இனத்தில் நபிகள் உதித்த உட்கிளை. |