பக்கம் எண் :

26 வலம்புரி ஜான்


கண்களைக் கழுவிக்கொண்டிருக்கும்

கடுவன் பூனைகள்

பசியால் அழுகின்றன !

O

ஆகவே தலைவனே ...

பாசிக்குப் பக்கத்தில் வரக்கூட

நான்

யோசிக்கிறேன் !

O

இறைவா !

சுண்டெலிகள் கூட

நினைத்தால் ...

கடிகாரத்தின் நாக்கினைக்

கட்டிப்போட்டு விடலாம் !

O

தலைவனே ...

என் இதயத்தை

நாளங்களால் கட்டியே

நகரவிடாமல் பண்ணுகிறார்கள் !

O

இருந்தும் -

என் இதயத்தை

கோடைகாலத்தில்

முயல்குட்டிகளைப் பாதுகாக்கிற