அஞ்சன விரல்களால் அண்ணலின் - துயர விழிகளைத் தூங்க வைத்த இரண்டே கரங்கள் இன்று இற்றுப்போயின ! O இயற்கையே காற்றுக்கு ஊரடங்கு உத்தரவு போட்டது. O அப்போது - உள்ளிருந்த காற்றை தனக்கின்றிக் கணவனுக்கு தந்து நின்றாள் பெருமாட்டி. O அவளது - மூக்கு முகத்துவாரங்களில்... காற்று இப்போது நாடு கடத்தப்பட்டது ! |