எனது விரல்களாலேயே எனக்குச் சிறைச்சாலை கட்டுகிறார்கள்! O கண்களைத் திறந்தால் இருட்டு ! கண்களை மூடிக்கொள்ளுகிறேன் எதிரில் இருக்கும் எல்லாம் தெரிகிறது ! O நெரிசலில்... தன்மையை உணருகிறேன் ! O தனிமையில் கூட்டத்தைத் தரிசிக்கிறேன் ! O தராசின் முள் முனை ஆடுவதைப் பார்த்ததுமே அபிப்பிராயங்களை ஆரோகணித்து விடுகிறார்கள் ... நிலைக்கு வருவதற்காகத்தான் முள்முனை - ஆடுகிறது என்பதை அறிந்து கொண்டபிறகும் அவசரம் காட்டுகிறார்கள் ! |