O இறைவனே ! ஒரு தீமையும் ஒருநாளும் ஒழிவதில்லை. அதே தீமைகள் - வெவ்வேறு முகங்களில் முகாமிடுகின்றன ! எல்லாம் உன் ஏற்பாடுதானே! O ஆட்டின்வால் அசைவதற்கே உன்சக்தி அவசியப்படுகிறது. ஊளையிடுகிற நரியின் ஓசையை ஒலியாக்கி ... ராக ராஜாங்கத்தில் சேர்த்துவிடுகிற ரசவாதியே! தீயவனுக்கும் தீனி வைக்கிறவன் நீதானே ! O சர்வசக்தியும்... நீயாய் இருக்க கள்ளிச் செடிக்கு மாத்திரம் - நீ கருணை காட்டாமல் இருக்க இயலுமா? |