பக்கம் எண் :

280 வலம்புரி ஜான்


முன்னறிவிப்பு இன்றி மூண்டதுபுயல் !


கண்மணியே ! கலங்காதே !

  

O

 

எவருக்கும் தீங்கு

எப்போதும் நினைக்காத

எம்பெருமான் ஒரு நாள்

வீதியில் விரைந்தார் ...

 

O

 

வளர்ந்த நெல் மணிகளின்

வரவேற்பு மரியாதையை

வரப்பின் மீது நடந்துகொண்டே

அன்னப்பறவை பெறுவது போல...

அக்காட்சி அமைந்தது !

 

O

 

எந்தத் தோட்டத்திலும்

முட்செடிகள் உண்டு.

மூடன் ஒருவன்

மண்ணை வாரி

மாநபி தலையில் இறைத்தான்.

 

O

 

மண்ணிலிருந்து வந்தவர்

மண்ணுக்கே திரும்புவர்

என்பதை எடுத்துக்காட்ட

அரங்கேறும் நிகழ்ச்சியோ

ஆரறிவார் ?