பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்281


அம்மா இருந்திருந்தால்...

அழுக்கான தலையை

அத்தரில் ஆட்டியிருப்பாள்.

அருமை மகள் பாத்திமா

கண்ணீரால் தந்தையின்

தலையைக் கழுவினார் !

 

O

 

கண்மணியே ! கலங்காதே

கருத்தன் உனது தந்தையைக்

கைக்குள் பொதிந்தே காத்திடுவான் -

நபிகள் நவின்றார் !

 

O

 

கோடைகாலம் வந்ததெனில்

மாரிக்காலத்திற்கு அது...

முன்னறிவிப்புத்தானே !

 

O

 

வியர்வையில் ஆடுகிறது

மேனி என்றால்...

விழப்போகிற மழைக்கு அது

வானிலை அறிவிப்பு அல்லவா ?