பக்கம் எண் :

284 வலம்புரி ஜான்


தண்ணீரை அடைகாத்த

மேகம்

மழைக்குழந்தை பெற

தாயிப் நகரைத்

தேர்ந்தெடுத்தது !

 

O

 

கூடவே

வளர்ப்பு மகன்

ஜைதும் உடன் சென்றார்...

எழுபத்தி மூன்று கற்களை

அண்ணல்

நடந்தே கடந்தார்.

 

O

 

அங்கே

மூன்று சகோதரர்களிடம்

இஸ்லாத்தை அறிவித்தார்.

 

O

 

கள்ள நாணயங்களே

கருவூலத்திலிருந்தால்

நல்ல நாணயத்தை

நாடு ஏற்குமா ?

 

O

 

இறைவன் ஒருவனே ;

அவனின் நபிநான்.

எச்சில் படாத கனிகளாக

எங்கள் வள்ளலின்

வார்த்தைகள்

பூ வளையம் புனைந்தன !