| அவர்கள் சிரித்து முடிப்பதற்குள் இரவுக்குச் சிறகு முளைத்துவிட்டது ! O பூமி முழுவதும் புடைத்த முட்கள் பாதம் ஒன்றையே பதம் பார்த்ததுபோல்... பலப்பல ஆண்டுகள் பட்ட பாட்டினை பத்தே நாட்களில் பட்டார் பெருமான் ! O கற்களுக்கெல்லாம் கைகள் முளைத்தன ! O முட்டில் அடிபட்டு நொண்டுகிற ஆட்டின் காலை முழுவதுமாக முறித்து விடுவது போல தாயிப் நகரத்தார் தவறிழைத்தார்கள். |