| கிராமத்துக் கோடாங்கி நாலுகால் வாலை நறுக்கென்று குத்துவதுபோல நபிகளின் உடலைக் குலைத்தார்கள் ! O கால்கள் முளைத்த கரிய குன்றின் மீது பாகனின் பஞ்சாயத்து முடிவடைந்து அங்குசத்தின் சர்வாதிகாரம் ஆரம்பமானது ! O ஆலாப்பறவையின் அலகில் அகப்பட்ட... காரல் பொடிபோல கசங்கினார் பெருமான் ! O கல்லடி தாங்கமுடியாமல் கால்சோர உட்கார்ந்தார். எழுப்பி வைத்து எல்லோரும் அடித்தனர் ! |