பக்கம் எண் :

288 வலம்புரி ஜான்


அண்ணலை

அறிந்து வைத்திருந்த அவர்

திராட்சைப் பழங்களைத்

திரட்டி அனுப்பினார்.

 

O

 

கறுப்புத் திராட்சைகள்...

அவரது உதடுகளை

ஆலிங்கனம் செய்வதற்கு

முன்னரே...

ஆண்டவனின் நாமத்தில்

அந்தப் பூவிதழ்கள்

புனித நீராடின !

 

O

 

இரண்டு சமயங்களுக்கும்

இருக்கிற வேறுபாட்டை

உடைத்து உரைக்கும்படி

உத்தமரை அவன் கேட்டான்.

இறைவன்

பெறவும் இல்லை ;

பெறப்படவும் இல்லை என்றார்

நபிகள் பெருமான்.