O பக்கமேளங்களுக்குப் பரிவட்டம் கிடைக்கிறது ... நாயனக்காரனின் முன்னால் நண்டுகள் புளியங்காய்களைப் புசிக்கின்றன ! O நாதசுரத்திலிருந்து நகரவேண்டிய இசைவேள்விக்கு எச்சில் கால்கட்டுப் போட்டு விடுகிறது ! O மலைகளை எடுத்து என்மீது எறிகிறார்கள் ... சூரிய விழுதால் எனக்கு சூடு போடுகிறார்கள் ... இருந்தும் முனைமுறிந்து போகாத என் எழுதுகோலுக்கு மூடிபோட அவர்களால் முடியவில்லை ! O நாயனே ... எல்லாம் உனது ஏற்பாடு. |