பக்கம் எண் :

32 வலம்புரி ஜான்


தன்னைப் பிழிந்த தவம் !

O

இது

பிரபஞ்சப் பாத்திரத்திலிருந்து

மனிதக்கலசத்திற்குள்

கை நழுவி விழுந்த

பிச்சைக்காசு.

O

இயற்கை

தன்னை அஞ்சல் செய்வதற்காக

அலைவரிசையில்

நிறுத்திவைத்திருந்த

சீதளக்கனவு.

O

பர்வதத்தை

பல்பத்தால் ...

நகர்த்த முனைகிற

எனது

பிள்ளைத்தனத்திற்காகப்

பொறுத்தல் கேட்கிறேன்.

O

இது

ஒரு நாளின்

ஆறாவது தொழுகை.