வழியில் குறைசிகளில் ஒருவன் அவளது ஈர உடம்பில் ஈட்டியால் ஊடுருவினான். உயிர் வாய்தா வாங்கிக் கொண்டது! O பிறகு கணவனும் காரிகையுமாக இஸ்லாத்தில் கரைந்தார்கள்! O மதீனா வாசிகள் சாற்றினை கைதிகளுக்குத் தந்துவிட்டு சக்கையோடு மாத்திரமே சமாதானம் ஆனார்கள்! O சம்மணம் போட்டிருக்கும் சாணக்கிய நீதியே! அண்ணலின் நீதியின் முன்னால் நீ காதில்லாத ஊசி ; கரிமருந்தில்லாத நெருப்புக்குச்சி.. |