பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்369


சோதனை மேல் சோதனை!

 

O

 

ஆலம் விதை தானே

என்று

இஸ்லாத்தை

அலட்சியமாக நினைத்தவர்கள்

அதற்குள்

கால் நீட்டிப்படுத்திருந்த

ஆலமரம்

வயதுக்கு வந்ததைப் பார்த்ததும்

அதிர்ச்சி அடைந்தார்கள்!

 

O

 

குவிந்த

கொள்ளைப் பொருளைப்

பங்கிடுவதில்

குழப்பம் வந்தது.

பெற்ற வெற்றிக்குப்

பெரியவன் ஒருவனே காரணம்.

உங்களுக்குள் எதற்காகக்

குத்துச் சண்டை

என்றார் அண்ணல்.

 

O

 

எந்த ஊர்க்காரனும்

மண்ணின் மைந்தன்தான்.

மண்ணிலிருந்து

மலர்ந்தவன் தானே மனிதன்!