ஆகவே தான்... வயதானதும் தவழ ஆரம்பிக்கிறான். பால் குடிப்பதற்காக இறுதியாக மண்மாதா மாராப்புச் சேலைக்குள் அவனை மறைத்துக் கொள்ளுகிறாள்! O பிறப்பும் இறப்பும் ஒரு வளையத்தின் இறுதியான இணைப்புப் புள்ளிகள். O மண்ணிலிருந்து மண்ணுக்கு... பட்டா, புறம்போக்கு என்கிற பாகுபாடு நிலத்தின் நினைவில் நிற்காதது... O நிலத்திற்கு வேலிவைத்தவன் ஆதிக்க வாதியின் இரண்டாவது மனைவிக்குப் பிறந்தவன். |