பழுத்த நரை என்று இருமிக்காட்டுகிறது! O விசித்திரத்தின் விரிப்புத்தானே... இயற்கை! O அப்சா உமரின் மகள் இருபத்திரண்டே ஆன இளங்காலைச் சொப்பனம். வெற்றியை தந்தைக்கு வழங்கிய பத்ருப் போர் இவள் நெற்றியை அமாவாசை ஆக்கியிருந்தது! O உமர் அவளது வாழ்வின் வசந்தத்திற்காக வாசல் வாசலாக வந்தார்... கதவுகள் கண்களை மூடிக் கொண்டன! O நபிகளிடம் வந்தார். கண்கள் - கோடை மழையாய் கொதித்தன ! |
|
|