அபூசுப்யான் அணித்தலைவர் ஆனார். அவரது மனைவி இந்தா பற்கள் முளைத்த பலாச்சுளை! பழிக்குப்பழி என்ற பதச்சமையலால் அவளது - வாய் அடுப்பு வெந்தது. O இருநூறு ஒட்டகங்கள் அபூசுப் யானைக் கைத்தாங்கலாகக் களத்திற்கு அழைத்து வந்தன. O சூதர்களும், சூழ்ச்சிக்காரர்களும்... தங்களது நச்சு நகங்களை வெட்டிக் கொண்டார்கள்! O இந்தாவின் கணவருக்கு... வெற்றி - அடிவானம் ஆனது ! O மதீனாவாசி ஒருவரை மக்கிப்போக வைத்தார்... |