பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்377


குடில்கள் சிலவற்றிற்கு

வெளிச்ச விருந்து வைத்தார்!

 

O

 

மாவு மூட்டைகளுக்குள்

மானத்தை

பொதிந்து விட்டுப் போனதால்

வரலாற்றில் இந்நிகழ்ச்சி

மாவுச்சண்டை என்று

மறுவாழ்வு பெற்றது.

 

O

 

மக்காவில் போர்வெறிக்குப்

புலவர்கள் கூட...

செய்யுள் கொடி ஏற்றினார்கள்!

 

O

 

மூவாயிரம் மக்கா வீரர்கள்

மதீனத்தை

மண்ணாக்கப் புறப்பட்டார்கள்.

முகமூடிகளே

முகங்களாய் நடந்தன!

 

O

 

இந்தாவின் தலைமையில்

பெண்களின் படை ஒன்று...

வாட்களையே

வளையல்களாக்கிக் கொண்டு

முன்னேறியது!