இல்லம் வந்து சேராது என்று இப்னு உபை முன்னூறு சூதர்களை பின்னுக்கு இழுத்தான். O எழுநூறு பேர்களென்றால் என்ன? பகைவர் மூவாயிரம் என்றாலும் என்ன? அல்லா இருக்கிறான் என்று ஆரவாரித்தார்கள். O சுண்டுவிரல்கள் சும்மா இருக்கட்டும்... என்றார் அண்ணல் அவைகளோ நடுவிரல்களுக்கே நடுக்கம் காட்டின. O சிறுவர்கள் போரார்வம் காட்டியது போலவே பெரியவரும் சேர்ந்தனர். O அபூ அமீர் என்ற சிலுவை மதத்தான் ஒருவன் அறிய மாட்டீர்களா என்னை என்றான். |