பக்கம் எண் :

382 வலம்புரி ஜான்


எட்டுத் திசைகளை

முப்பத்திரண்டாகக்

கூறுபோட்டு எறிந்தது!

 

O

 

குறைசியர் கொடி

மண்சோறு தின்றது!

 

O

 

ஓநாய்கள் எவை

ஆடுகள் எவை என்று

அறிந்து கொள்ள இயலாத சூழல்.

நானே முகம்மது

என்ற அண்ணலின் குரல்

பின்னிய அணிகளைப்

பிரித்தது.

 

O

 

இற்று விழுந்தார்

அண்ணல் என்றான்

ஒரு பகைவன்.

இந்த

உடும்பின் உள்நாக்கில்

நரம்பு நடந்து கொண்டிருந்தது.

குழப்பம் விளைந்தது.

பொய்யின் ஆட்சி

பொக்கென வீழ்ந்தது!

 

O

 

அண்ணலைக் காத்த

மனிதச் சுவர்கள்