பக்கம் எண் :

384 வலம்புரி ஜான்


அண்ணல்

ஈட்டியால் அவன் மீது

எழுதினார்

அலறி அவன் பின்வாங்கினான்.

 

O

 

இதற்கா இந்த ஆர்ப்பாட்டம்?

குறைசிகள் கேட்டனர்.

 

O

 

என் வேதனையை

உங்கள் எல்லோருக்கும்

வினியோகம் செய்தாலும்

நீங்கள்

தாங்கிக் கொள்ள மாட்டீர்கள்

என்றான்.

 

O

 

அவர்

ஈட்டியை எறிய வேண்டாம் ;

எச்சிலை உமிழ்ந்தால் கூட

நான்

எழுந்திருக்க இயலாது

என்றான்!

 

O

 

உண்மை

பாம்புச் சட்டைகளை

பக்குவமாக உரித்தது.

அண்ணல் மறைந்தார்