பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்385


என்ற வதந்திக்கு

வாய் முளைத்தது!

 

O

 

பாத்திமா நாயகியும்

பலரும்

ஓடோடி வந்தார்கள்.

தங்கள் உயிரின் கரத்தில்

வாள்

வரலாறு படைப்பதைப்

பார்த்தார்கள்.

மரணம் அவர்களிடத்தில்

மறுமுறை வருவதாக

வாய்தா வாங்கியது.

 

O

 

அண்ணலின் அன்னப் பறவை

ஆயிஷாவும் மற்றப் பெண்களும்

முஸ்லிம் வீரர்களின்

தாகத்திற்கு

தண்ணீர் வார்த்தனர்!

 

O

 

வேறொரு பெண்ணிடம்

உம் தந்தை இறந்தார் ;

தம்பி இறந்தார் ;

என்ற செய்தி இடிகள்

இறங்கிக் கொண்டே

இருந்தன.

அவளோ -

அல்லாவிடமிருந்து வந்தோம் ;