பக்கம் எண் :

386 வலம்புரி ஜான்


அவனிடமே மீளுவோம்

என்றாள்.

 

O

 

இஸ்லாமியக் கொடி

இறக்கை கட்டிப் பறந்தது!

 

O

 

அபூசுப்யானுக்கும்

உமருக்கும்

வாக்குவாதம் வளர்ந்தது.

ஏகன் இறைவன்

என்கிற உமரின் குரல்

சிகரக் கொண்டைகளை

அவிழ்த்தது...

 

O

 

இந்தா

அம்சாவின் ஈரலை எடுத்து

அருந்தி மகிழ்ந்தாள்.

இரு படைகளும்

இருக்கைகளுக்குத் திரும்பின.

 

O

 

போர்க்கைதிகள் இல்லாமல்...

கொள்ளைப் பொருட்கள் இல்லாமல்...

வெற்றி என்று

மக்கா வாசிகளிடம் எப்படி

விளம்பரிப்பது என்று

அபூசுப்யான்

அயர்ந்தார்.