பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்391


இருவர்தவிர அனைவரும்

உயிர்களை

இழக்க நேர்ந்தது.

 

O

 

பிழைத்தவரில் ஒருவர்

பிடரியில் குதிங்கால் நரம்பு

பின்னலிட ஓடிவந்தார்.

பகைவர் இருவரைப் பார்த்தார்.

சினத்தீ படர்ந்தது.

ஈக்கள் இரண்டும்

இற்று விழுந்தன.

 

O

 

அபயப்பத்திரம் பெற்ற இருவரை

ஆத்திரம் அழித்தது-

அறிந்தார் அண்ணல்

உள்ளம் பதைத்தார்.

 

O

 

தலைவர்களை இழந்த

குடும்பங்களுக்கு

இழப்புத்தொகை தந்தார்.

இழப்புத்தொகையை

இடுப்பில் சொருகிக்கொண்டு

கொலைகளைச் செய்துவிடுகிற

கொள்ளைக்கார அரசாங்கங்கள்,

நபிகளின் செயல்களைப் பார்த்தால்

நாணத்தான் வேண்டும்!