பக்கம் எண் :

392 வலம்புரி ஜான்


இஸ்லாமிய இரத்தம் ...

 

 

O

 

மற்றொரு முறை

இறைப்பணியாளர்கள்

பதின்மரில்

எண்மர் பகைவரின்

அம்புப்படுக்கையை

அணைத்து மறைந்தனர்!

 

O

 

வாடகை மனிதர்களை வைத்து

பகைவர்கள்

முஸ்லிம்களை முடித்தனர்.

 

O

 

பிழைத்தவர் ஒருவர்    

பத்ருப் போரில்

மக்காவாசி ஒருவரை

தாழைக்கத்தியால்

தலையைப் பறித்தவர் -

தூக்கிலிடப் போனார்கள்...

 

O

 

அவரோ-

தொழ வேண்டும் என்றார்.

தொழுதுகொள் என்றார்கள்.