பக்கம் எண் :

394 வலம்புரி ஜான்


நபிகளின் காலில்

நெருஞ்சி தொடுவதைப்

பார்ப்பதைவிட

நொறுங்கி நான் சாவதே பேறு-

என்றார்.

 

O

 

வார்த்தைகள்

வீடுகட்டி விளையாடின!

 

O

 

அபூசுப்யானின்

விரல்-

மூக்கிற்குமேலே

விறைத்தது.

O

 

ஆதரவாளர்களுக்கும்

அகதிகளுக்கும் இடையில்

இப்னு உபை

இடைஞ்சல் உண்டாக்கினான்.

 

O

 

வாட்களுக்கு

விடுதலை கிடைக்கிறநேரம்

வள்ளல் விரைந்தார்...