பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்395


கீரைத்தண்டை

கிள்ளி எறிவதுபோல

இப்னுவின் தலையைத்

தட்டி எறிய தனையனே

உத்தரவு கேட்டான்.

 

O

 

இரக்கத்தின்

இன்னொரு பெயரான

முகம்மது முடியாது என்றார்.

 

O

 

ஓளஸ், கஸ்ரஜ்

இரண்டு இனங்கள்

ஓநாயும் நாயும் போல

ஒத்திருந்தனர்...

 

O

 

எனினும்...

சூதர்-

பகை நெருப்பினை

பற்றவைத்தனர்!

 

O

 

அண்ணலின் கருணைவெள்ளம்

நீலநெருப்பை நீர்த்துப்போட்டது!