பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்397


என்று சிலர் நினைப்பர்

இந்தக் கூட்டுக்குள்

ஆன்மப்பறவை அல்லவா

குறுகுறுத்துக் கொண்டிருந்தது

என்பார் அண்ணல்.

 

O

 

சுக்குநூறானது சூதர் சூழ்ச்சி !

 

O

 

முஸ்லிம் மஸ்லின் ஒன்று

சூதர் கடைக்குப்

பொருள் வாங்கப்போனது.

அந்த

மாலைவானத்தை

மழைச் சேறாக்கிவிட்டார்கள்.

 

O

 

சதைப்புயலான

முஸ்லிம் ஒருவர்

கட்டு மரங்களைக்

காட்டுக்கனுப்பினார்.

 

O

 

போர் என்றனர்

சூதர்கள்-

எச்சரித்தார்

எங்கள் வள்ளல்.