உடன்பாட்டை உடைத்தனர் சூதர். O வாள் ஒன்று புறாவின் அலகில் புதைக்கப்பட்டது ! O சூதர் கோட்டையைச் சூழ்ந்தனர் முஸ்லிம்கள் பதினைந்து நாளில் பணிந்தனர் அவர்கள். O உடன்பாடு என்றார்கள். உயிரைப் போக்கிவிட்டால் உடன்பாட்டிற்கு அவசியமில்லை என்றார்கள் முஸ்லிம்கள்! O கருணை வள்ளலின் கண்ணீர்த்துறைமுகத்தில் கவலைக்கப்பல்கள் பிழைத்துப் போங்கள் என்றது பிள்ளைமனம் எழுநூறு சூதர் சிரியாவை எட்டினர் |