பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்399


முஸ்லிம்கள் சிலரை

முடித்தற்காகச்

சூதரிடம்-

இழப்புத்தொகைக் கேட்டு

இமயமே போனது!

 

O

 

கூழாங்கற்கள்

இமயத்தை இடித்துவிட

குறிபார்த்தன.

 

O

உருட்டப்படுகிற

பாறாங்கல்லை

உணர்ந்தார்.

அவ்விடம் அகன்றார்.

மதீனம் வந்து

மறைக்காமல் உரைத்தார்.

 

O

 

குழந்தை மகரந்தமும்

புல்லிவட்டத்திற்கு வெளியே

புறப்படப் பார்த்தது.

 

O

 

பத்து நாள் தவணை என்றார்.

நடுக்கத்தை விளைவித்த